search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறந்த நீதிமன்றம்"

    சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மற்றும் ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


    இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 48 மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சீராய்வு மனுக்களை பரிசீலனை செய்த நீதிபதிகள், ஜனவரி 22-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த மனுக்கள் மீது திறந்த நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    சபரிமலை வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டாலும், தற்போதைய தீர்ப்புக்கு தடை எதுவும் கிடையாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    ×